Girl, Beware of modern male ewes - பெண்ணே, நவீன ஆண் ஏவாள்களுக்கு ஜாக்கிரதை
பெண்ணே!!!
வேதத்தில் சொல்லப்படாத விடுதலை விடுதலைக்கு அடையாளமல்ல. விசுவாசிகளான பெண்கள் வேதவார்த்தைகளை மீறி நடப்பதற்கான அடையாளமாகத்தான் இருக்கின்றன. பெண்களே! . நித்திய இரட்சிப்பை நோக்கி நடைபோடுவதற்கு தகுந்தவிதத்தில் வேதத்திற்கு அடங்கி அமைதலோடு நடந்து கொள்ளுங்கள். அடங்கி நடந்து கொள்ளுங்கள் என்று படிக்கும்போதே கோவம் வரும் உண்மைதான். ஆனால் ஆதியில் ஏவாள் செய்த அதே பாவத்தை தொடர்ந்து செய்து பழி தேடிக்கொள்ளாதீர்கள்.எந்த ஒரு தேவனுக்கு பிரியம் அல்லாத காரியத்தில் ஈடுபட்டு உங்களைக் கறைபடுத்திக் கொள்ளாதீர்கள்.
பெண்கள் சபையில் இப்படித்தான் நடந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் விதித்திருக்கும் நியதிகள் சமுதாயத்தில் அவர்கள் பக்திவிருத்தியோடும், பாதுகாப்போடும் வாழத்தான் என்பது இன்றும் ஒரு சில பெண்களுக்கு புரியாமலிருக்கிறது.
கர்த்தரின் விதிகளை மீறும் விசுவாசிகளான பெண்கள் சமுதாயத்தில் ஆவிக்குரிய விருத்தியோடு வாழ முடியாததோடு, நித்திய இரட்சிப்புக்கான பாதையில் பல்வேறு இடறல்களையும் சந்திக்க நேரிடும் என்பதைத் உணர்வது அவசியம். பெண்களுக்கு நன்மை செய்கிறோம், அவர்களை மதிக்கிறோம், அவர்களுக்கு கொடுக்க வேண்டிய இடத்தைக் கொடுக்கிறோம் என்று பெண் விடுதலையை நாடும் புத்திசாலிகளாக தம்மைப் பறைசாற்றிக்கொண்டு செயல்படுபவர்கள் ஆண்கள் ஆனாலும் சரி, பெண்கள் ஆனாலும் சரி.கர்த்தரின் கோபத்துக்குள்ளாகப் போவது உறுதி.குறிப்பாக சபை, சபை சார்ந்த காரியங்கள், தேவனை மகிமை படுத்தும் இடம் மட்டுமல்லாமல் எல்லா இடங்களிலும் கர்த்தர் விதித்திருக்கும் விதிமுறைகளை மீறுதல் கூடாது






இன்னும் பல.
இப்படியான போன்றவற்றை செய்பவரும்,ஊக்குவிப்பவரும் கர்த்தரின் கோபத்திற்கு அடங்குவர்.
கர்த்தர் பெண்களுக்கு சமுதாயத்தில் எதைச் செய்வது தகும், தகாது என்று விதித்திருப்பதை விளக்குகிறது. அதை மீறுவது ஆபத் தானதும், நெருப்போடு விளையாடும் செயலுமாகும்.
குறிப்பாக வாலிப பிள்ளைகள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். நீ எப்படி வேண்ணாலும் வாழ்ந்து கொண்டு என்னை மகிமைப்படுத்து என கர்த்தர் கூறவில்லை. என்ன, எப்படி, எங்கு செய்யவேண்டும், எப்படி வாழவேண்டும். எதை சாப்பிடவேண்டும் என்பது முதற்கொண்டு தேவன் வேதத்தில் எழுதிவைத்துள்ளார்.
மிகவும் கவனம் தேவை.
சபை, சபை சார்ந்த விஷயங்கள், சபை நபர்கள், அண்ணாகள், போதகர்கள்,போதகர் பிள்ளைகள் என யாராக இருந்தாலும் எந்த இடமாக இருந்தாலும், அது கர்த்தரின் மகிமைக்காகவே இருந்தாலும்
எந்த இடத்திலும்
""நீங்கள் ஒரு பெண் ""
என்பதை மறந்து விட கூடாது. பெண்ணே உனக்கான
சில ஆலோசனைகள்:











Sis. Meena Juliet
Description: Tamil Devotional Message By Sis. Meena Juliet, Girl, Beware of modern male ewes - பெண்ணே, நவீன ஆண் எவாள்களுக்கு ஜாக்கிரதை.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.
Keywords: Sis. Meena Juliet, Devotional, Devotional Message.