Thanimaiyin paathaiyil - தனிமையின் பாதையில்



தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ

ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - 2

சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே

உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேளையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே

பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான்


Songs Description: Tamil Christian Song Lyrics, Thanimaiyin paathaiyil, தனிமையின் பாதையில்.
KeyWords: Moses Rajasekar, Thanimayin Pathayil. Tamil Christian Songs, Kirubaye Deva Kirubaye, Kirubaye Theva Kirubaye,  Kirubaiye Deva Kirubaiye.

Pray For Our Nation For More.
I Will Pray